News November 4, 2025
மதுரை: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணன் மகள் பாண்டீஸ்வரி 20. இவர் நிலக்கோட்டை அரசு கலை கல்லூரியில் சிஎஸ்ஐ 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News November 4, 2025
மதுரையில் 56 பவுன் தங்க நகை மோசடி

மதுரை தெற்காவணி மூலவீதியில் நகை வியாபாரம் செய்பவர் சதீஷ்குமார் 38, இவரிடம் அப்பகுதி நகைக்கடை உரிமையாளர் தட்சிணாமூர்த்தி 77 மகன் நவநீதகிருஷ்ணன் 38 ஆகியோர் நகை வாங்கி வியாபாரம் செய்தனர். கடந்த ஆகஸ்ட்.22ல் 15 நாட்களில் பணம் கொடுத்து விடுவதாக கூறி 56 பவுன் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்தனர். இது தொடர்பாக நவநீதகிருஷ்ணனை தெற்குவாசல் போலீசார் கைது செய்து விசாரணை.
News November 4, 2025
மதுரை: 12th PASS – ஆ? ரூ.71,900 சம்பளத்தில் வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 4, 2025
கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மதுரை உயா்நிலை பாலம் கட்டுமான பணிகள் காரணமாக, போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு. மதுரை கோரிப்பாளையம் பகுதியில் வலது பக்கச்
சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, அழகா்கோவில் சாலையிலிருந்து கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தமுக்கம் சந்திப்பிலிருந்து புதிதாக அமைக்கபட்ட இடது பக்க சாலையை பயன்படுத்தி கோரிப்பளையம் சந்திப்பு செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது.


