News June 15, 2024

மதுரை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் முலம் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே மதுரை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Similar News

News February 3, 2026

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (03.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 3, 2026

மதுரை இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் எண்கள்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (3.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக போலீசுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவியைப் பெறலாம்.

News February 3, 2026

மதுரை: பைக் வாங்கி தராததால் இளைஞர் விபரீத முடிவு

image

திருமங்கலம் அருகே திடியன் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம்(19). இவர் மதுரையில் தனியார் நிறுவன வேலைக்கு தினசரி செல்ல டூவீலர் வேண்டும் என தனது தாயாரிடம் கூறி வந்துள்ளார். வீடு கட்டியதால் ஏற்பட்ட கடன் காரணமாக தற்போது டூவீலர் வாங்க முடியாது என தாயார் கூறியதால் விரக்தியடைந்த பரமசிவம் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!