News May 2, 2024
மதுரை கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2956 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 2652 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3120 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News March 7, 2026
மதுரை: கேஸ் OFF செய்ய மறந்த பெண் பலி

பேரையூர் அருகே பெரியபூலாம்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி மகள் பிரியா(26). இவர் நேற்று முந்தினம் சமையல் செய்வதற்காக கேஸ் ஸ்டவ் திறந்து விட்டு அதை ஆப் செய்யாமல் அப்படியே வெளியே சென்று விட்டார். மீண்டும் வந்து கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்த போது திடீரென அவர் மீது தீ பற்றியது. இதில் உடல் கருகிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு பலியானார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 6, 2026
BREAKING மதுரைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச்.7) நண்பகல் 12.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தனியார் விடுதியில் தங்குகிறார். அதன்பின் மாலை 5.20 மணிக்கு திருமங்கலம் ராயபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுக கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாலை 6 மணிக்கு சென்னை செல்கிறார்.
News March 6, 2026
மதுரை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

மதுரை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <


