News May 2, 2024
மதுரை கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2956 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 2652 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3120 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News September 13, 2025
மதுரை: நாய் குறுக்கே வந்ததால் பலியான உயிர்

மதுரை பழைய விளாங்குடி காமாட்சி நகர் ஜெயபால் மகன் வீரக்குமார் (26). அதே பகுதி சாலையில் பைக்கில் சென்ற போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் வீரக்குமார் பிரேக் அடிக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக் அருகில் இருக்கும் காம்பவுண்ட் சுவரில் மோதியாது. சாக்கடை பள்ளத்தில் விழுந்த வீரக்குமார் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 13, 2025
மதுரை காமராசர் பல்கலை.யில் வேலை!

மதுரை காமராசர் பல்கலை-யில் கீழகண்ட 3 பணியிடங்களுக்கு காலிபணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
⏩பதவியின் பெயர்: JRF, Technical Assistant
⏩கல்வித்தகுதி:B.Sc, M.Sc
⏩மாத ஊதியம்:ரூ.20,000 டூ ரூ.37,000
⏩ கடைசி தேதி: 15.09.2025
⏩விண்ணப்பிக்கும் முறை: <
⏩அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 13, 2025
மதுரை: பிரபல தொழிலதிபர்கள் இடங்களில் ரெய்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொழிலதிபர்கள் மணி (எ)முத்தையா மற்றும் மருது பாண்டியனுக்கு சொந்தமான எம்.வி.எம் நிறுவனங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இவர்கள் மீது சில ஆண்டுகளுக்கு முன் ‘இரிடியம்’ குறித்த பண மோசடி புகார் எழுந்தது. அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று இங்கு சோதனையை நடத்தினர்.