News April 17, 2025
மதுரை : கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சுமார் 150 கிலோ கஞ்சாவை கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தி வந்ததாக மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் சசிகுமார் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறையும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Similar News
News April 19, 2025
போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி

மதுரை, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போலீஸ் எஸ்-ஐ தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 23ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. விரும்புவோர் ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அனுகவும். தங்களது சுய விவரங்கள் பதிவேற்றம் செய்து பாடக்குறிப்புகளை இந்த <
News April 19, 2025
கடத்தப்பட்ட தொழிலதிபர் ! சினிமா பாணியில் சேஸிங் செய்து மீட்பு…

மதுரையில் இடத் தகராறு காரணமாகக் கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து சுந்தரம் மீட்கப்பட்டார். பீ.பீ குளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஏப்.6 மர்மநபர்களால் கடத்தப்பட்டார். இந்நிலையில் இன்று மதுரை, பாண்டி கோயில் பாலம் அருகே போலீசார் விரட்டி பிடித்து 2 பேரைக் கைது செய்தனர். கடத்தல் தொடர்பாக ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது.
News April 19, 2025
லாரியில் சிக்கி 5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட இளைஞரின் உடல்

மதுரை, வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் 30. இவருக்கு மனைவி பிரியா 25, 2 மகள்கள் உள்ளனர். நேற்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து டூவீலரில் சென்றபோது ஆண்டிபட்டி பங்களா அருகே மதுரை நோக்கி சென்ற லாரியின் பின் சக்கரத்தில் மோதி டூவீலருடன் சிக்கி உடல் 5 கி.மீ. வரை இழுத்து செல்லப்பட்டது. லாரியில் உடல் சிக்கி இருப்பதை கண்ட சிலர் டூவீலரில் சென்று தகவல் தெரிவித்த பின்பு தான் டிரைவருக்கு தெரியவந்தது.