News November 1, 2025
மதுரை: உயர்நீதிமன்ற கிளைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செப்., 26 ல் தகவல் வந்து அது புரளி என உறுதியானது. நேற்று மீண்டும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு கண்டெடுக்கப்படவில்லை. புரளி என உறுதியானது. வழக்கம் போல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடந்தன.
Similar News
News November 1, 2025
மதுரை: மன விரக்தியில் கூலித்தொழிலாளி எடுத்த முடிவு

மதுரை கள்ளிக்குடி அருகேயுள்ள தூம்பகுளம் ராமர். இவரது மகன் பாண்டீஸ்வரன் (37) பிளம்பராக பணி புரிந்து வந்துள்ளார். இதற்கிடையே அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தின் வரவு செலவு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டீஸ்வரன் மன விரக்தியில் இருந்து வந்துள்ளார், இந்நிலையில் நேற்று மதியம் தூம்பகுளம் கோயில் அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 1, 2025
மதுரை: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! உடனே APPLY

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் <
News November 1, 2025
மதுரை: கார் கவிழ்ந்து கோர விபத்து; இளைஞர் பரிதாப பலி.!

உசிலம்பட்டி அருகே எலுவம்பட்டியைச் சேர்ந்தவர் அபினேஷ் (26). அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினருடன், பசும்பொன்னிற்கு காரில் சென்றார். இதில் பார்த்திபன் என்பவர் ஓட்டிய காரில் அபினேஷ் உள்ளிட்ட 7 பேர் சென்றனர். செல்லம்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மீது மோதி கார் கவிழ்ந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி அபினேஷ் பலியானார். மற்றவர்கள் லேசான காயமடைய செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.


