News August 13, 2025
மதுரை: ஆக.15ல் மதுக்கடைகள் அடைப்பு

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று (ஆக.12) வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆக.15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வாணிபக் கழகம் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்து இயக்கும் மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தகங்கள், அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை நிலையம் என அனைத்தும் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News August 13, 2025
மதுரை: இது முக்கியம்.. உடனே பண்ணுங்க.!

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த ஆப்-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் நாம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த <
News August 13, 2025
மதுரை மாநகராட்சி மேயர் கணவர் GH-ல் அட்மிட்

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு நடந்த விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்னையில் வைத்து கைது செய்தனர். இந்நிலையில், தற்போது பொன்வசந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் விசாரணைக்காக அவர் மதுரை அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் தற்போது இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
News August 13, 2025
மதுரை: இங்கெல்லாம் இன்று மின்தடை

மதுரை மாவட்டத்தில் இன்று (ஆக.13) பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. உசிலம்பட்டி நகர், பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, சீமானூத்து, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வாகைக்குளம், மாதரை, தொட்டப்பநாயக்கனூர்,இடையபட்டி,உத்தப்பநாயக்கனூர்,திருநகர்,ஹார்விபட்டி, மேக்கிலார்பட்டி, கிரிபட்டி,பொக்கம்பட்டி, நக்கலப்பட்டி, வில்லாணி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.