News September 18, 2025
மதுரை அருகே மின்னல் தாக்கி மாணவர் பலி

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா காளப்பன்பட்டி ராஜ்குமார் மகன் கவுதம் 18. இவர் கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மாலை கல்லூரி விட்டு வீடு திரும்புவதற்காக காளப்பன்பட்டி அருகே டூவீலரில் இவரது நண்பர் அருண்பாண்டியுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி கவுதம் இறந்தார். அருண் பாண்டி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
Similar News
News March 3, 2026
மதுரை : உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 3, 2026
மதுரை: 2 வயது குழந்தை பலி; தண்ணீருக்கு பதிலாக..!

மதுரை, கள்ளிக்குடி அருகே சித்தூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது 2 வயது குழந்தை ஆருத்ரன், நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, தண்ணீர் என நினைத்து அங்கிருந்த மண்ணெண்ணையை எடுத்து குடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 3, 2026
மதுரை: முக்கிய ரயில்களின் சேவையில் அதிரடி மாற்றம்

மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி – ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், ஐதராபாத் செல்லும் சிறப்பு ரயில் ஆகியவை வருகிற 7, 14, 21, 28 மற்றும் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.


