News April 6, 2025
மதுரை அருகே மாடி வீடே இல்லாத வினோத கிராமம்

நாகரீகம் வளர்ந்து வரும் நவீன காலத்தில்மாடி வீடே இல்லாத அதிசய கிராமம் ஒன்று மதுரை மாவட்டத்தில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்
சேடப்பட்டி அருகே பொன்னையன்பட்டி கிராமத்தில் சுமார் 120 வீடுகள் உள்ளது. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக திகழும் கருப்பசாமிக்கு கட்டுப்பட்டு கோவிலின் உயரத்தை மீறி கட்டிடம் அமைத்தால் துன்பம் வந்து சேருமோ என்ற அச்சத்தில் பல தலைமுறையாக மாடி வீடே காட்டாமல் உள்ளனர் கிராமத்தினர்.
Similar News
News April 7, 2025
சரவணப்பொய்கையில் மூழ்கி கோவையை சேர்ந்தவர் பலி

மதுரையில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் கோவை தோப்பூன்பட்டியை சேர்ந்த நந்தகோபால் என்பவர் பங்கேற்றார். இவர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொறுப்பாளரும் ஆவர். இந்நிலையில் நந்தகோபால் நேற்று திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் குளிக்க சென்ற போது கால் தடுமாறி தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்துள்ளார். தகவலறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 6, 2025
பிரதமரை முதல்வர் அவமதித்து விட்டார் – அண்ணாமலை

மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். அதில், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்காதது வருத்தம். இதில் அரசியல் செய்வது தவறு. முதலமைச்சருக்கு வெயில் தாங்காது என்று ஊட்டிக்கு சென்று விட்டார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தனது கடமையை செய்ய தவறிவிட்டார். பிரதமரை அவமதித்த முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
News April 6, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச அடையாள அட்டை வழங்கும் முகாம்

மதுரை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அதன்படி கீழ்காணும் மண்டல வாரியாக முகாம்கள் நடைபெறுகின்றன. அதில் கலந்து கொண்டு பயன்பெற மதுரை மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அதன்படி கள்ளிக்குடி ,செல்லம்பட்டி ,T கல்லுப்பட்டி, ஏழுமலை ,உசிலம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.