News December 21, 2025

மதுரை: அரசு அலு­வ­ல­கம் புகுந்து அலுவலர் மீது தாக்குதல்

image

மேலூரை சேர்ந்த­ ஞான­சே­கர்(29) மதுரை எல்­லீஸ் நக­ரில் உள்ள தொழி­லா­ளர் நல அலு­வ­ல­கத்­தில் உத­வி­யா­ள­ராக உள்ளார். நேற்று அலு­வ­ல­கத்­திற்கு வந்த நாக­ராஜன்(52) என்­ப­வர் தக­ராறில் ஈடுபட்டு, அரு­கில்
கிடந்த இரும்பு கம்­பியை எடுத்து தாக்­கி­, கொலை மிரட்­டல் விடுத்­தார். காயமடைந்த ஞான­சே­கர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்கப்பட்டார். எஸ்.எஸ்.காலனி போலீ­சார் நாக­ரா­ஜனை கைது செய்­த­னர்.

Similar News

News December 23, 2025

மதுரை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

மதுரை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். (அ) 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News December 23, 2025

மதுரையில் நாயை அரிவாளால் வெட்டி கொடூரன்.!

image

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் செல்வம் 53 கோயில் பூசாரி, கோவில் பகுதியில் பாதுகாப்புக்காக நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதி முத்துராஜ் 27 கோயில் அருகில் வரும் போது செல்வம் வளர்க்கும் நாய்கள் அடிக்கடி குறைத்துள்ளன, ஆத்திரமடைந்த முத்துராஜ் நேற்று கையில் இருந்த அரிவாளால் நாய்களில் ஒன்றை வெட்டினார், தட்டி கேட்ட கோவில் பூசாரி செல்வத்தை மிரட்டினார். போலீசார் முத்துராஜை கைது செய்தனர்.

News December 23, 2025

மேலூர்: சாலை விபத்தில் ஒருவர் துடிதுடித்து பலி

image

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சூரக்குண்டு முனிக்கோவில் அருகே 4 வழிச்சாலையில் இன்று (டிசம்பர் 23) அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் போலீசார். இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!