News February 26, 2025
மதுரை அமைச்சர் துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டு

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டியளித்தார். மதுரை நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை என்பதை தேர்தல் ஆணையம் ஒன்று உருவாக்கப்படாத நிலையில் எதன் அடிப்படையில் முதலமைச்சர் ஒரு பீதியை மக்களிடத்தில் கிளப்புகிறார். பத்திர பதிவுத்துறையில் பரகாசுரன் ஊழல் நடந்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மதுரை அமைச்சர் மூர்த்தியின் துறை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 6, 2026
BREAKING மதுரைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச்.7) நண்பகல் 12.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தனியார் விடுதியில் தங்குகிறார். அதன்பின் மாலை 5.20 மணிக்கு திருமங்கலம் ராயபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுக கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாலை 6 மணிக்கு சென்னை செல்கிறார்.
News March 6, 2026
மதுரை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

மதுரை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <
News March 6, 2026
மதுரை: அகில இந்திய அளவில் சாதனை படைத்த மாணவி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மார்ச்.6) வெளியாகியுள்ளன. இதில் வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அனுஜ் அக்னிஹோத்ரி முதலிடத்தையும், ஆகாஷ் துல் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். மொத்தம் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜேஸ்வரி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்வர் என்பது குறிப்பிடத்தக்கது


