News December 27, 2025

மதுரையில் 70 பேருக்கு மறுவாழ்வு

image

மதுரை அரசு மருத்துவமனையில், கடந்த 11மாதங்களில் மூளைச்சாவு அடைந்த (மோகன் குமார், வினோத், பெருமாள், கோச்சடை முத்தையா, சபரீஷ், ஆனந்த போதிகுமரன், முனியாண்டி, ஹரிதேவி, ஈஸ்வரன், முருகேஸ்வரி, தேவமனோகரி மற்றும் சேகர்) ஆகிய 12 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறுநீரகம் 22 பேர், கல்லீரல் 10 பேர், இதயம் & நுரையீரல் தலா 2 பேர் என மொத்தம் 70க்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

Similar News

News December 27, 2025

மதுரையில் ஆற்றில் குளிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்

image

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் முத்துப்பாண்டி(25). இவரது மனைவி காயத்ரி கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துப்பாண்டி திருவேடகம் அருகில் செல்லும் வைகை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 27, 2025

மதுரை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 27, 2025

மதுரை: சாணி பவுடர் குடித்து துடிதுடித்து பலி

image

திருவாதவூர் அருகே சுண்ணாம்பூரை சேர்ந்தவர் முருகன்(48). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மீனாட்சி மதுரையில் உள்ள அப்பளம் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். மனைவி வேலைக்கு சென்றதும் முருகன் நேற்று முன்தினம் சாணி பவுடரை குடித்து மயங்கி விழ, அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க, அங்கு அவர் பலியானார்; காரணம் குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!