News March 28, 2025
மதுரையில் 3 மாதங்களில் மூன்று போலீசார் கொலை

மதுரையில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 3 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிப்.2ல் குடும்ப பிரச்சினையில் நாகையாபுரம் காவல் நிலைய காவலர் சிவா வெட்டி கொலை செய்யப்பட்டார். மார்ச் 18ல் காளையார் கோவில் தனிப்படை காவலர் மலையரசன் ஆட்டோ ஓட்டுநரால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News April 3, 2025
மதுரை மாவட்ட புறநகர் பகுதி இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி,மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 2, 2025
‘கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப் போராட்டம் தேவை’

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டியளித்துள்ளார். அதில், கச்சத்தீவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் சட்டப் போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு மீனவர்களின் உயிர், உடைமை பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது என்றார்.
News April 2, 2025
மதுரை: ஒரே மேடையில் சாலமன் பாப்பையா மற்றும் சசிகுமார்

மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-வது மாநாடு நடைபெற்று வருகிறது. முதல் நாள் கலை நிகழ்வில் ஆசிரியர் சாலமன் பாப்பையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். சிறப்பு விருந்தினராக இயக்குனரும் நடிகருமான சசிகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக காலையில் கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.