News April 19, 2024
மதுரையில் முதல்முறையாக சூப்பர் அறிவிப்பு!

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை விழாவில் முதன்முறையாக பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் சித்திரை திருவிழா தொடர்பான புகார்களை 99949 09000 மற்றும் 0452-2526888 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
மதுரை: 10 அடி நீள மலைப் பாம்பு உயிருடன் மீட்பு

கொட்டாம்பட்டி அருகே குன்னங்குடிப்பட்டி குடியிருப்பு பகுதியில் விவசாயி கண்ணன் என்பவரது வீட்டின் அருகாமையில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு நேற்று தென்பட்டது. கொட்டாம்பட்டி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் தலைமையில் வந்த விஜயராஜ், கெளதம், லோகநாதன், இளையராஜா, கண்ணன் ஆகியோர் விரைந்து சென்று பாம்பை உயிருடன்
பிடித்து வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.
News December 31, 2025
மதுரை: ரூ.3 லட்சம் கடன்.. 50% தள்ளுபடி! APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News December 31, 2025
மதுரை: 10ஆம் வகுப்பு மாணவன் பரிதாப பலி

பேரையூர் நாகராஜன் மகன் ஆதிலவன் டி.கல்லுப்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை பேரையூர் பி.ஆண்டிபட்டி ரோட்டில் உள்ள விவசாய கிணற்றில் நண்பர்களுடன் குளித்த போது, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மாணவர் உயிரிழந்தார். அப்போது பகுதி மக்கள் கிணற்று நீரை வெளியேற்றி நேற்று உடலை மீட்டனர். இதுகுறித்து பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


