News December 24, 2025
மதுரையில் மின் திருட்டு; ரூ.21 லட்சம் அபாரதம்

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மதுரை அமலாக்க பிரிவு கோட்ட பொறியாளர் மனோகரன் தலைமையில் மதுரை திண்டுக்கல் விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சட்ட விரோதமாக மின் திருட்டு குறித்து அதிரடி சோதனைகள் நடந்தது. இதில் சுமார் 16 இடங்களில் சட்ட விரோதமாக மின் திருட்டு கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.21 லட்சத்து 81 ஆயிரத்து 104 விதிக்கப்பட்டது.
Similar News
News December 26, 2025
மதுரை: பெண்களை BODY SHAMING செய்யும் தவெக செயலாளர்.?

மதுரையிலும் நேற்று தவெக வடக்கு மாவட்ட செயலாளர் கல்லாணைக்கு எதிராக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அளவில் பதவிகளை வழங்க கல்லாணை மறைமுகமாக பணம் கேட்கிறார். பெண் தொண்டர்களை ‘பாடி ஷேமிங்’ செய்யும் வகையில் கேலி செய்து வருகிறார். அவர் மீது குற்றம் சாட்டு வைக்கப்படுகிறது. கல்லாணை தரப்பில்,அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்றார்.
News December 25, 2025
மதுரை மாவட்ட ஆட்சியர் பெயரில் முகநூலில் போலி கணக்கு!

மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பெயரில் சமூக வலைதளமான முகநூலில் போலி கணக்கு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் நண்பர் கோரிக்கைகள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போலி கணக்கிற்கு பொதுமக்கள் யாரும் பதிலளிக்கவோ, நண்பர் கோரிக்கையை ஏற்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற போலி கணக்குகளை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
News December 25, 2025
மதுரை: பட்டா மாற்றுவது இனி ரொம்ப சுலபம்..

மதுரையில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது<


