News April 15, 2025

மதுரையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

image

மதுரை, உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாயி. நேற்று தோட்டத்திற்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சென்று பார்த்த போது மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். அதே போல் பொய்கைகரைப்பட்டியை சேர்ந்தவர் மலைசாமி. வீட்டில் கேபிள் டிவி வயரை தொட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.மின்சாரம் சம்பந்தமான பொருட்களைக் கையாள்பவர்களுக்குத் தகுந்த உபகரணங்களுடன் செயல்பட SHARE செய்து அறிவுறுத்துங்க

Similar News

News January 27, 2026

JUST IN மதுரை: பிரபல ரவுடி என்கவுண்டர்!

image

மதுரை பிரபல ரவுடி வெள்ளை காளி மீது கடந்த 24ம் தேதி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி கொட்டு ராஜா எனப்படும் அழகுராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்து சென்றபோது எஸ்.ஐ சங்கரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால், போலீசாரால் கொட்டு ராஜா என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.

News January 27, 2026

மதுரை கார் மோதியதில் பைக்கில் சென்றவர் பலி

image

மதுரை, பேரையூர் சேடப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி(48). இவர் தனது டூவீலரில் பேரையூர் உசிலம்பட்டி சாலையில் நேற்று முன்தினம் சென்ற போது அமிர்தம் பார்ம் அவுஸ் அருகே, முன்னாள் வந்த கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சேடப்பட்டி போலீசார் பேரையூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுவாமிநாதன்(58) என்பவரை கைது செய்து இன்று விசாரிக்கின்றனர்.

News January 27, 2026

மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சு; 4 சிறுவர்கள் கைது

image

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மகாலட்சுமி நகர், காலி இடத்தில் பெட்ரோல் குண்டு வெடிக்க செய்த 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மது போதையில் சிறுவர்கள் இச்செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பயங்கர சத்தத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இச்சம்பவத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் உள்ளனரா என போலீசார் விசாரணை.

error: Content is protected !!