News April 15, 2024
மதுரையில் மானியத்துடன் தீவன அபிவிருத்தி திட்டம்

தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மதுரை மாவட்டத்தில், ஊடுபயிராக கால் நடைகளுக்கான தீவனப்புல் வளர்த்தால் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தீவனச் சோளம், கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல், பயறு வகை தீவனப்புல் வகைகளில் ஒன்றை ஊடு பயிராக பயிரிடலாம். ஏக்கருக்கு ரூ.3000 முதல் ஒரு ஹெக்டேருக்கு 7500 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு 2 கால்நடைகளுடன் அரை ஏக்கர் விவசாய நிலம் அவசியம்.
Similar News
News February 6, 2026
மதுரை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News February 6, 2026
மதுரை: லாரி மோதியதில் ஒருவர் பலி

சமயநல்லூர் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (37). இவர் தனது டூவீலரில் நேற்று வாடிப்பட்டி சென்று விட்டு, மதுரை – திண்டுக்கல் சாலையில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் பெட்ரோல் தீர்ந்து போனது. இதனால் ரோட்டை கடந்து பெட்ரோல் வாங்கி கொண்டு சாலையை கடந்த போது அவ்வழியாக வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 5, 2026
மேலூர் அருகே லாரி, கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி : 4 பேர் காயம்

சிவகங்கை நாட்டரசன் கோட்டை கண்ணன்(54) பூக்கடை வைத்துள்ளார். இவரது மகன் கோபியுடன்
காரில் இன்று அதிகாலை 2 மணிக்கு மேலூர் நான்கு வழிச்சாலையில் சென்றனர். தெற்குபட்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர்களது பூக்கடையில் வேலை பார்த்து வரும் பாண்டி, சாகுல், மணி, குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


