News March 26, 2024

மதுரையில் பிறப்பித்த அதிரடி உத்தரவு

image

மதுரை மாநகரில் இறுதி ஊர்வலத்தின்போது போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும், இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பேனர் நிறுவக்கூடாது, மலர்வளையம், பூமாலைகள் சாலை, வாகனங்களின் மீது தூவக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகளை மீறி மக்களின் பாதுகாப்பிற்கும், உயிருக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News January 27, 2026

JUST IN மதுரை: பிரபல ரவுடி என்கவுண்டர்!

image

மதுரை பிரபல ரவுடி வெள்ளை காளி மீது கடந்த 24ம் தேதி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி கொட்டு ராஜா எனப்படும் அழகுராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்து சென்றபோது எஸ்.ஐ சங்கரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால், போலீசாரால் கொட்டு ராஜா என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.

News January 27, 2026

மதுரை கார் மோதியதில் பைக்கில் சென்றவர் பலி

image

மதுரை, பேரையூர் சேடப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி(48). இவர் தனது டூவீலரில் பேரையூர் உசிலம்பட்டி சாலையில் நேற்று முன்தினம் சென்ற போது அமிர்தம் பார்ம் அவுஸ் அருகே, முன்னாள் வந்த கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சேடப்பட்டி போலீசார் பேரையூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுவாமிநாதன்(58) என்பவரை கைது செய்து இன்று விசாரிக்கின்றனர்.

News January 27, 2026

மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சு; 4 சிறுவர்கள் கைது

image

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மகாலட்சுமி நகர், காலி இடத்தில் பெட்ரோல் குண்டு வெடிக்க செய்த 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மது போதையில் சிறுவர்கள் இச்செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பயங்கர சத்தத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இச்சம்பவத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் உள்ளனரா என போலீசார் விசாரணை.

error: Content is protected !!