News January 13, 2026
மதுரையில் பிறந்த 10 நாளான குழந்தை உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி பரமேஸ்வரி(31). இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை உசிலம்பட்டி மருத்துவமனையில் பிறந்தது. இரவு குழந்தைக்கு பால் கொடுத்து தொட்டிலில் தூங்க வைத்து உள்ளனர். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது, குடித்த பாலை கக்கி மூச்சுத் திணறி குழந்தை தொட்டிலில் இறந்து கிடந்தது. இதுக்குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை.
Similar News
News April 8, 2026
மதுரை: கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்களா..?

மதுரை மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். SHARE IT
News April 8, 2026
மதுரை:தாசில்தார் லஞ்சம் கேட்டால் புகாரளிக்கலாம்

மதுரை மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று (அ) பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு குறிப்பிட்ட பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், 0452-2531395 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகாரளித்தால் உடனடி நடவடிக்கை பாயும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News April 8, 2026
மதுரை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

மதுரை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0452-2640778 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)


