News August 5, 2024
மதுரையில் நாளை மின்சாரம் நிறுத்தம்

மதுரையில் உள்ள புதூர், ஆனையூர், எல்லீஸ் நகர் துணைமின் நிலையங்களில் நாளை(ஆக.6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதூர் துணைமின் நிலையம், ஆனையூர் துணைமின் நிலையம், எல்லீஸ் நகர் துணைமின் நிலையங்களுக்குட்டபட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 28, 2026
மதுரை: பெட்ரோல் குண்டு வீசிய போலீசார் மீது வழக்கு

கள்ளிக்குடியை சேர்ந்த மாணிக்கத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் சொத்து பிரச்சினை காரணமாக, அரிவாள், கத்தியுடன் வீடு புகுந்து மாணிக்கத்தை நேற்று முன்தினம் தாக்கி, பெட்ரோல் குண்டை வீசினர். சென்னை ஆயுதப்படை போலீஸ் மருதுபாண்டி(29), பெரியசாமி(55), சின்ன மாரிச்சாமி(50), சூர்யா(32) உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளிக்குடி போலீசார் சூர்யாவை கைது செய்தனர்.
News January 28, 2026
மதுரை மக்களே பண்டிகைக்கு ரெடியா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன்படி விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 26, திருக்கல்யாணம் 28, தேரோட்டம் 29-ல் நடைபெறுகின்றன. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
News January 27, 2026
மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0452-2535067
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


