News December 23, 2025
மதுரையில் நாயை அரிவாளால் வெட்டி கொடூரன்.!

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் செல்வம் 53 கோயில் பூசாரி, கோவில் பகுதியில் பாதுகாப்புக்காக நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதி முத்துராஜ் 27 கோயில் அருகில் வரும் போது செல்வம் வளர்க்கும் நாய்கள் அடிக்கடி குறைத்துள்ளன, ஆத்திரமடைந்த முத்துராஜ் நேற்று கையில் இருந்த அரிவாளால் நாய்களில் ஒன்றை வெட்டினார், தட்டி கேட்ட கோவில் பூசாரி செல்வத்தை மிரட்டினார். போலீசார் முத்துராஜை கைது செய்தனர்.
Similar News
News December 26, 2025
மதுரை: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

மதுரை மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் <
News December 26, 2025
மதுரை: கார் மோதி தொழிலாளி பலி.!

கொட்டாம்பட்டி, பள்ளப்பட்டி சேர்ந்தவர் ராமச்சந்திரன் (44). கட்டிடத் தொழிலாளியான இவர் நேற்று காலை டூவீலரில் இருந்து, நான்கு வழிச்சாலையில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வஞ்சிநகரம் அருகே இவருக்கு பின்னால் வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் லோகநாதன் விபத்து குறித்து விசாரித்து வருகிறார்.
News December 26, 2025
மதுரை: வயல்வெளியில் மயங்கி கிடந்த முதியவர் பலி

மேலூர் அருகே தெற்கு தெரு வயல்வெளி பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக தெற்குதெரு விஏஓ மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று இறந்தார். இறந்த நபர் யார் என்பது குறித்து மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


