News April 7, 2025
மதுரையில் தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் அபராதம்

மதுரை மாவட்டத்தில் ”வணிக, உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க தவறினால் மே 1 முதல் அபராதம் விதிக்கப்படும்” என தொழிலாளர்துறை எச்சரித்துள்ளது. மேலும் இவ்விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 1லட்சம் அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம் என்பதால் விதியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தெரிந்தவர்களுக்கு SHARE செய்யவும்.
Similar News
News April 9, 2025
மதுரை மாவட்டத்தில் இரவு காவலர் பணி விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் 9 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 9, 2025
மதுரையில் அஜித் படம் வெளியாவதில் புது சிக்கல்

நடிகர் அஜித் நடிப்பில் நாளை நாடு முழுவதும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கான பல்வேறு ஏற்பாடுகளை ரசிகர் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள திரையரங்கத்தில் ஒரு டிக்கெட்டுக்கு 500 முதல் 250 வசூல் செய்ய வேண்டும் என திரைப்பட விநியோகம் அனுமதி பெற்றுள்ள நிறுவனம் கட்டாயப்படுத்துவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பாக ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.
News April 9, 2025
மதுரையில் நாளை மது கடைகள் அடைப்பு

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்.10) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் மதுபானக்கூடங்கள் அனைத்தும் நாளை ஒருநாள் மூடப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.