News October 23, 2025
மதுரையில் சோகம்..மது என மருந்து குடித்தவர் பலி

மதுரை மாவட்டம் பாலமேடு முடுவார்பட்டி கண்ணன் 57. பந்தல் அமைக்கும் தொழிலாளி. அக்.,18 இரவு போதையில் வீட்டில் மது பாட்டில் என நினைத்து ஆயுர்வேத மருந்தை குடித்து வாந்தி எடுத்து மயங்கினார்.மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 23, 2025
மதுரை அருகே 8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கரட்டுப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கருப்பட்டி பிரிவு அருகே கரூர், வெங்கமேட்டை சேர்ந்த தங்கவேல் மகன் சதீஷ்குமார் 28, சந்தேகத்திற்கிடமான வகையில் காருடன் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்ததில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மேல் விசாரணை நடத்துகின்றனர்.
News October 23, 2025
மதுரை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கே <
News October 23, 2025
மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் இன்று காலை 9:00 – மாலை 5:00 மணி வரை இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், மேலமடை, எல்காட், கண்மாய்பட்டி, செண்பகத் தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, ராஜிவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ஸ்ரீராம் நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர், டி.எம்.நகர், தாசில்தார் நகர், அண்ணாமலையார் பள்ளி, ஆவின் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.


