News October 17, 2025
மதுரையில் சோகம்… தீபாவளிக்கு வந்தவர் தற்கொலை

மதுரை பழங்காநத்தம் ஆர்சி தெரு கருப்பசாமி மகன் அசோக்குமார் 26 தஞ்சாவூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமான நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி மனைவிக்கு ஜவுளி எடுக்க அசோக் குமார் மதுரை வந்தார். இங்கே அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் அசோக் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 18, 2025
மதுரையில் மல்லிப்பூ விலை உயர்வு

உணவு உணவு மதுரை மல்லி கிலோ ரூ.1500, பிச்சி ரூ.1000, முல்லை ரூ.900, செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.60, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.500, ரோஸ் ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.200, பன்னீர் ரோஸ் ரூ.250, கோழிக்கொண்டை ரூ.70, அரளி ரூ.150, மரிக்கொழுந்து ரூ.70, தாமரை (ஒன்றுக்கு) ரூ.15 உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தீபாவளியை ஒட்டி மதுரை மல்லியின் விலை ரூ.2 ஆயிரத்தைத் தொடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துll
News October 18, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (17.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 17, 2025
சதுரகிரி செல்ல 5 நாட்கள் தடை

மதுரை சங்ககிரி மகாலிங்கம் மலைக்கோயில் 18ம் தேதி ஐப்பசி மாத சனி பிரதோஷம் 21ஆம் தேதி அமாவாசை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை பெய்வதால் சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது எனவே (இன்று) 17 முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேறிச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.