News March 31, 2024
மதுரையில் களைகட்டிய ஈஸ்டர் பண்டிகை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி சிறப்பு திருப்பலியில் வழிபாடு நடத்தினர். மேலும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
Similar News
News August 14, 2025
JUST IN: மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் சிறையிலடைப்பு

மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கில் கைதான மேயர் கணவர் பொன்வசந்துக்கு சிகிச்சை முடிந்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் அவருக்கு ரத்த அழுத்தம் கூடியிருந்த நிலையில், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 26 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
News August 14, 2025
மதுரையில் நிலம் வாங்குறீங்களா? மக்களே உஷார்!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. மதுரை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<
News August 14, 2025
மதுரை மாநகர் – தெரு நாய் கடித்து ஒருவர் படுகாயம்

மதுரை நேதாஜி சாலையில் தூத்துக்குடி சேர்ந்த இஸ்மாயில் தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் இஸ்மாயில் காலை கடித்தது, அவர் தப்பித்துவிட நினைத்தும் தொடர்ந்து விரட்டி கடித்ததால் ரத்தப்போக்கு அதிகமாகி அவர் மயங்கி விழுந்தார், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் தெரு நாய்களை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.