News March 25, 2024
மதுரையில் ஒரே நாளில் 6 இளம்பெண்கள் மாயம்!

மதுரையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 6 இளம்பெண்கள் நேற்று ஒரே நாளில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளிக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவி நாகரத்தினம் 17, திருப்பாலையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரேஷ்மா 18, ஒத்தக்கடையை சேர்ந்த கல்லூரி மாணவி அபிநயா 18, மேலூரை சேர்ந்த மகாலட்சுமி 23, உள்ளிட்ட 6 பேர் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News October 27, 2025
மதுரை: தபால் துறையில் வேலை…நாளை கடைசி

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதாவது ஒர் டிகிரி படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் இருந்தால் போதுமானது. ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் <
News October 27, 2025
மதுரை: ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும்.
1.இங்கு க்ளிக் பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க.
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க. 7 நாளில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News October 27, 2025
ராஜாஜி மருத்துவமனையில் ஒரே நாளில் 66 பேர் அனுமதி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 66 பேர் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டனர். இதில் 36 பேர் குழந்தைகள். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மூவருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. மழையால் காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்து வருவதாகவும், டெங்கு கட்டுப்பாட்டுக்கு சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


