News November 30, 2025
மதுரையில் எஸ்ஐஆர் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் இன்று (30.11.2025) மதுரை மாவட்டம்,192-மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு தீவிர திருத்தம் SIR தொடர்பாக நடைபெறும் உதவி மையத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை தொலைபேசி செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் பணியினை ஆய்வு செய்து பார்வையிட்டார்.
Similar News
News December 4, 2025
JUST IN மதுரை காவல் ஆணையர் ஆஜரானார்..

திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரை 5:30 மணிக்குள் ஆஜராக கூறி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்த நிலையில், மதுரை காவல் ஆணையர் லோகநாதன் காணொளி காட்சி மூலம் ஆஜரானார். நீதிபதி எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு காவல் ஆணையர் லோகநாதன் பதிலளித்து வருகிறார்.
News December 4, 2025
BREAKING மதுரை ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவு.!

திருப்பரங்குன்றம் வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் 5:30 மணிக்குள் ஆஜராகவிலையென்றால் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துளளார். சீருடையில் இல்லையென்றாலும் பரவாயில்லை உடனடியாக ஆஜராக கூறியுள்ளார். 5 நிமிடத்தில் எப்படி ஆஜராக முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News December 4, 2025
BREAKING: மதுரை காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு.!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் பத்து நிமிடத்தில் காணொளி மூலம் ஆஜராக நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்ற காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டும், பாதுகாப்பு வழங்காதது ஏன் என விளக்கம் தர உத்தரவிடபட்டுள்ளது.


