News March 27, 2024
மதுரையில் இன்றே கடைசி

மதுரை மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி முதல் துவக்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை 3மணியுடன் வேட்புமனு நிறைவடைகிறது. மதுரை தொகுதியில் போட்டியிட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
Similar News
News December 27, 2025
மதுரை: ரேஷன் கார்ட் இருக்கா… முக்கிய அறிவிப்பு… டிச.31 கடைசி

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க
News December 27, 2025
மதுரை அருகே 19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் மருது பாண்டி 19. இவர் நேற்று மாலை வெளியில் சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்த பொழுது அவரது தந்தை தாயாருடன் தகராறு செய்வதை பார்த்து கண்டித்துள்ளார். இது தொடர்பாக தந்தை மகன் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. இதில் மனம் உடைந்த மருதுபாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News December 27, 2025
மதுரையில் ஆற்றில் குளிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் முத்துப்பாண்டி(25). இவரது மனைவி காயத்ரி கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துப்பாண்டி திருவேடகம் அருகில் செல்லும் வைகை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


