News December 18, 2025
மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிலம்பட்டி, மறவர் பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையபட்டி, இராம கவுண்டன்பட்டி, தெத்துார், கரடிக்கல், சின்ன பாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, உசிலம்பட்டி, முடுவார் பட்டி, குறவன் குளம், ஆதனுார், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு. அலங்காநல்லுார், நேஷனல் சுகர் மில், வைகாசிப்பட்டியில் மின்தடை ஏற்படும். SHARE பண்ணுங்க.
Similar News
News December 25, 2025
மதுரையில் பறவைகள் கணக்கெடுப்பு

மதுரையில் வரும் டிசம்பர்,27 மற்றும் 28ம் தேதிகளில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக, சாமநத்தம், நிலையூர், வண்டியூர், விரகனூர் மதகணை உள்ளிட்ட 25 நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் 90472-86690,90922-84531 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், dfomdu@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு விபரங்களை அனுப்பலாம் என மதுரை மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.
News December 25, 2025
மதுரை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE பண்ணுங்க.
News December 25, 2025
மதுரை அருகே மனைவி பிரிவால் வாலிபர் தற்கொலை

சத்திரப்பட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் முத்திராஜா (25). இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவருடன் தகராறில் ஈடுபட்ட மீனாட்சி தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விட்டார். இதனால் வேதனையடைந்த முத்துராஜா தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


