News April 16, 2024
மதுரையில் அதிரடி உத்தரவு

மதுரை மாவட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் உள்ளிட்ட மதுக்கூடங்கள் 17.04.2024 அன்று காலை 10 மணி முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நாள்) இரவு 12 மணி வரை மற்றும் 21.04.2024 (மகாவீர் ஜெயந்தி) ஆகிய தினங்களில் மதுபான கடைகள் மூடப்படும் என ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மேலும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 11, 2025
திருமங்கலம் டோல்கேட் கொலை சம்பவம்: முதியவரும் பலி

திருமங்கலம் கப்பலூரில் நேற்று முன்தினம் இரவு கல்யாண் குமார் 19. மது போதையில் தகராறு செய்து அவ்வழியாக சென்ற போஸை 75 அரிவாளால் வெட்டினார், பின்னர் டோல்கேட்டில் தனியார் பஸ் கண்டக்டர் அழகர்சாமியிடம் டைம் கேட்டு தகராறு செய்து வெட்டியதில் அவர் இறந்தார். கல்யாண் குமார் கைதான நிலையில், நேற்று சிகிச்சையில் இருந்த போஸ் இறந்தார். கல்யாண் குமார் மீது போலீசார் இரட்டை கொலை வழக்கு பதிவு செய்தனர்.
News December 11, 2025
மதுரை: ஜப்தி செய்யப்பட்ட கார்; இளைஞர் தற்கொலை.!

மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (30) சொந்தமாக கார் வாங்கி ஓட்டுவதற்காக, கே.கே. நகரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கினார். அதற்கு கடந்த 6 மாதமாக தவணை கட்டாததால் பைனான்ஸ் அதிகாரிகள் காரை ஜப்தி செய்து விட்டனர். இதன் காரணமாக மனமுடைந்த கார்த்திக் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
செய்து கொண்டார். சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 11, 2025
மதுரையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு.

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


