News October 27, 2025
மதுரையின் புதிய மேயர் இவரா..?

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு புகாரில் இந்திராணி, மேயர் பதவியை இழந்தார். புதிய மேயருக்கு கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்ட செயலாளர் தளபதி ஆகியோரின் சிபாரிசுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. முன்னாள் மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, கவுன்சிலர்கள் மகாலட்சுமி, ரோகிணி, லட்சிகா ஸ்ரீ, இந்திராகாந்தி பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
Similar News
News October 27, 2025
ராஜாஜி மருத்துவமனையில் ஒரே நாளில் 66 பேர் அனுமதி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 66 பேர் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டனர். இதில் 36 பேர் குழந்தைகள். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மூவருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. மழையால் காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்து வருவதாகவும், டெங்கு கட்டுப்பாட்டுக்கு சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
News October 27, 2025
மதுரை: உளவுத் துறையில் ரூ.1,42,400 சம்பளத்தில் வேலை

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 258
1. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
2. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
3. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
4. கடைசி தேதி: 16.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 27, 2025
மதுரையில் முன்விரோதத்தில் ஒருவர் கொலை

மதுரை புதுவிளாங்குடி யுவராஜ், 24. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஷியாம்குமார், சபா ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. யுவராஜ், அக்., 19 இரவு, நண்பர் சித்தனுடன் 19, வீட்டின் முன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது ஷியாம்குமார், சபா உட்பட 6 பேர், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் யுவராஜை வெட்டினர். மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில், சித்தன் நேற்று இறந்தார்.4 பேரை கூடல்புதுார் போலீசார் கைது செய்தனர்.


