News January 19, 2025
மதுரைபோல் சேலத்திலும் ஜல்லிக்கட்டு நடத்த கோரிக்கை

மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடக்கிறது. தற்போது ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம் பாகுபலி காளை முதல் பரிசை பெற்றது. சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேல் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகின்றன. எனவே மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோல் சேலத்திலும் வாடிவாசல் அமைத்து நடத்த வேண்டும் என சேலம் பாகுபலி காளையை வளர்த்த மோகன்ராஜ், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Similar News
News July 10, 2025
உங்கள் வழக்குகளை விரைந்து முடிக்க அரிய வாய்ப்பு

சேலம் மாவட்டம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளை, ஜூலை முதல் செப்டம்பர் வரை அனைத்து நாட்களிலும், மாவட்ட சமசர மையம் மற்றும் தாலுகா சமரச மையங்களில் நேரடியாகவோ, வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவோ சமரசமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை, வழக்காடிகள் அனைவரும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கேட்டுக் கொண்டுள்ளார்.
News July 10, 2025
ரூ.320க்கு ₹15 லட்சம் விபத்து காப்பீடு; இன்றே பதிவு செய்யுங்கள்

“இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு வெறும் ரூ.320, 550, 799 பிரீமியத்தில் 15 லட்சம், 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு அறிமுகம். இன்று முதல் (ஜூலை 10) சிறப்பு விபத்துக் காப்பீடு பதிவு கடைப்பிடிக்கப்படவுள்ளதால் 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் பதிவுச் செய்து கொள்ளலாம்” என சேலம் அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க
News July 10, 2025
சேலம் ஜூலை 10 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஜூலை 10 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10 மணி தமிழ்நாடு அரசு அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️காலை 10:15 மணி சோனா கல்லூரியில் முதலாம்ஆண்டு வகுப்புகள் துவக்க விழா▶️ 12 மணி இந்திய புரட்சிகர சோசலிஸ்ட் இயக்கம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்▶️ மாலை 6 மணி குரு பூர்ணிமா பூஜைகள்