News May 4, 2024

மதுரைக்கு விரைவில் 346 புதிய பேருந்துகள்

image

அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஆறுமுகம், மதுரை கோட்டத்திற்கு 2022-23, 2023-24ம் ஆண்டுகளில் 350 பஸ்கள் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 137 புதிய பஸ்கள் இயங்கி வருகின்றன. காலாவதியான 85 பஸ்கள் கழிக்கப்பட்டன . மேலும் 213 பஸ்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். மதுரை நகருக்கான 133 தாழ்தள பஸ்களும் தயாராகின்றன. பஸ்கள் படிப்படியாக கழிக்கப்படும்” என்று கூறினார்

Similar News

News November 23, 2025

மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்களிடம் மோசடி

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேற்று வந்த ஆந்திர பக்தர்கள் 39 பேரிடம், தன்னை கைடு என அறிமுகப்படுத்திக் கொண்ட மூவர் சிறப்பு தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக கூறி தலா ரூ.250 பெற்று ஏமாற்றி உள்ளனர். ரூ.50 கட்டணத்திற்கு அதிக பணம் வாங்கியது அறிந்த பக்தர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் வெங்கடேஷ், அம்மையப்பன், கணேசன் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி கைது செய்தனர்.

News November 22, 2025

மதுரை: எகிறும் மல்லிகை விலை; இரட்டிப்பாக உயர்வு

image

மதுரை மல்லி கிலோ ரூ.2800, பிச்சி ரூ.1500, முல்லை ரூ.1500, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.150, செண்டு மல்லி ரூ.80, கனகாம்பரம் ரூ.800, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.350, கோழிக்கொண்டை ரூ.120, அரளி ரூ.150, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1டன் வரத்து உள்ளது பனியின் காரணமாக மல்லிகை விளைச்சல் மிகக் குறைவாக உள்ளதால் விலையும் சற்று அதிகம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

News November 22, 2025

மதுரை: ஓட ஓட விரட்டி கொன்ற இருவர் கைது!

image

மதுரையில் முத்துமணி போஸ் என்பவர் பைக்கில் சென்றபோது, அவரை கீழே தள்ளி தலையில் கல்லைப்போட்டு <<18327802>>கொலை <<>>செய்ததாகக் கூறி, ரவுடி வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்த சரவணக்குமார்(19) மற்றும் கார்த்திகேயன்(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வத்தலகுண்டு பகுதியில் ஜூலை 11ம் தேதி சிவமணியை கொலை செய்த வழக்கில் முத்துமணி போஸின் சகோதரர் முனியசாமி ஈடுபட்டதால், பழிவாங்கும் நோக்கில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

error: Content is protected !!