News October 29, 2024
மதுரைக்குள் கனரக வாகனங்கள் வர தடை

நாளை தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் இருக்கும் தேவர் சிலைக்கு தலைவர்கள், சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்துவார்கள். இதனால் நாளை காலை 6:00 மணி முதல் இரவு 10:30 மணிவரை கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் வர தடை விதித்து மாநகர காவல் துறையினர் உத்தரவு. மீறிவரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News August 16, 2025
காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு.

மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடவுச்சொல் பாதுகாப்பு
தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்குங்கள். இரண்டு அடுக்கு பாதுகாப்பினை பயன்படுத்தவும். கடவுச்சொற்களை யாருடனும், ஒருபோதும் பகிர வேண்டாம். கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றவும். தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்த வேண்டாம். குறைந்தது 8 எழுத்துகள் கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
News August 15, 2025
மதுரை: 20 ரூபாய்க்காக பள்ளி மாணவி தற்கொலை..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளியில் (ஆகஸ்ட் 15) இன்று கொடியேற்ற நிகழ்வுக்கு செல்ல 20 ரூபாய்க்கு கேட்ட மாணவிக்கு தாய் பணம் தர மறுத்ததால், மாணவி ராஜராஜேஸ்வரி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 20 ரூபாய்க்காக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செக்கானூரணி போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 15, 2025
மதுரையில் கணவரால் பிரச்சனையா.? உடனே கூப்பிடுங்க.!

மதுரையில், நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 0452 – 2580259 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!