News August 17, 2024

மதுபோதையில் தகராறு: ஒருவர் அடித்துக் கொலை

image

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜ், முருகவேல்(34) ஆகியோர் நேற்றிரவு மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், நாகராஜ் ஆத்திரமடைந்து மது போதையில் உருட்டுக் கட்டையால் முருகவேலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், முருகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News February 25, 2026

திருத்தணிக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் !

image

திருவள்ளூர்: திருத்தணியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 4.50 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய நவீன பேருந்து நிலையம் நாளை திறக்கப்படுகிறது. அரசு போக்குவரத்து பணிமனை அருகே நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட இந்த நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் பிரதாப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புதிய பேருந்து நிலையம் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

News February 25, 2026

திருவள்ளூர்: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு!

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 25, 2026

திருவள்ளூரில் விரைவில் புது பஸ் ஸ்டாண்ட்!

image

திருவள்ளூர் நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் பஸ் நிலையம் திறப்பு விழாவை முன்னிட்டு இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பஸ் நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் நிறைவடையும் நிலையில், கட்டட அலங்காரம், சுத்தம் மற்றும் வசதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

error: Content is protected !!