News June 2, 2024
மதுபான கடையில் மது பாட்டில் திருடிய நபர் கைது

செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் ஊராட்சி வெங்கடேசபுரம் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையில் நேற்று மதுபானக்கடை ஜன்னலை உடைத்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான திவான், பூவரசு ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Similar News
News July 5, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (04.07.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 4, 2025
திருவண்ணாமலையில் 127 போலீசார் பணியிட மாற்றம்

தி.மலை மாவட்டத்தில் 127 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் இருந்து 63 காவலர்கள் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றிய 64 ஏட்டுகள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News July 4, 2025
தி.மலையில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

தி.மலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் FINANCIAL ADVISER பணிக்கு 50 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் <