News February 10, 2025
மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பெண்கள் கைது

கண்ணமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெண்ணிலா (57). இவர், தனது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக கண்ணமங்கலம் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் குளத்துமேட்டில் வசிக்கும் ரேவதி (43) என்பவர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 49 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News August 21, 2025
தி.மலை: டிகிரி போதும் LIC நிறுவனத்தில் அரசு வேலை

LIC நிறுவனம் உதவி நிர்வாக அலுவலர்(பொது), உதவி பொறியாளர், உதவி நிர்வாக அலுவலர்(Chartered Accountant, Company Secretary, Actuarial, Insurance Specialists, Legal) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 850 காலிப்பணியிடங்கள் உள்ளது. இளங்கலை/ பொறியியல் பட்டம் பெற்ற 21-30 வயதிற்குட்பட்டோர் <
News August 21, 2025
தி.மலை: டிகிரி போதும் LICயில் வேலை

LIC AAO வேலைக்கு முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு உண்டு. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்கள் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவை இல்லை. ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
தி.மலை மக்களே இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா

கடந்த ஆண்டு 30 பேர் தி.மலை மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2000 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டு, 8 பேருக்கு தொழுநோய் உறுதி செய்யபட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தீவிர தொழுநோய் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொழுநோயை பற்றி தெரிந்து கொள்ள இங்கு <<17469663>>கிளிக்<<>> பண்ணுங்க.