News September 4, 2024

மதுக்குடிக்க பணம் தராததால் கணவர் தற்கொலை

image

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன், இவர் மனைவி சோபியாவிடம் குடிக்க பணம் கேட்டார். சோபியா பணம் கொடுக்க மறுக்கவே கோபித்து கொண்டு சென்ற பாலச்சந்திரன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 15, 2025

புதுவை: கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க உத்தரவு

image

மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் குறைதீர் கூட்டத்தில் பேசுகையில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பதை கண்காணிக்க நேரடியாக வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் குப்பைகள் கிடப்பதை ஒழுங்குபடுத்த சிறப்பு தூய்மை பணி திட்டம் உருவாக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை வரைமுறைப்படுத்த ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார்.

News September 15, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

image

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தேர்தல் வரையறை மற்றும் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 15, 2025

புதுச்சேரி பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை!

image

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகார அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சட்டசபையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி மற்றும் காரைக்காலச் சார்ந்த 120 பத்திரிக்கையாளர்களுக்கு புதுச்சேரி அரசின் அங்கீகார அடையாள அட்டையை வழங்கி கௌரவித்தார் நிகழ்ச்சியில் செய்திதுறை இயக்குனர் முனுசாமி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி கணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!