News January 3, 2026

மதுக்கரை பகுதியில் மர்ம விலங்கு? அதிர்ச்சி சம்பவம்

image

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை மற்றும் எட்டிமடை பகுதிகளில் நேற்று இரவு மர்ம விலங்கு மோதியதில், இப்பகுதியைச் சேர்ந்த சிவசாமி என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உலா வரும் விலங்கு சிறுத்தையா அல்லது வேறு ஏதேனும் விலங்கா என்பதைக் கண்டறிய தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 31, 2026

மருதமலை முருகன் சிலை: நீதிமன்றம் போட்ட ஆர்டர்!

image

மருதமலை வனப்பகுதியில் ரூ.110 கோடியில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் கட்டுமானங்களை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்ததுள்ளது. சுற்றுச்சூழலும் வனவிலங்குகளும் பாதிக்கப்படும் என்பதால், 500 மீட்டருக்கு அப்பால் மாற்று இடத்தைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

News January 31, 2026

கொலை குற்றவாளிக்கு ஆயுள்: பரபரப்பு தீர்ப்பு

image

கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவு பெற்று, இன்று சுரேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5500 அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.

News January 31, 2026

கொலை குற்றவாளிக்கு ஆயுள்: பரபரப்பு தீர்ப்பு

image

கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவு பெற்று, இன்று சுரேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5500 அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!