News November 3, 2024

மண்ணச்சநல்லூர் பகுதியில் மாரடைப்பால் வாலிபர் பலி

image

மண்ணச்சநல்லூர் அருகே வடக்கிப்பட்டி பூனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் ( 35) நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஏற்கனவே இறந்ததாக கூறினார்கள். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் ஒரு கிராமமே சோகத்தில் உள்ளது.

Similar News

News August 5, 2025

திருச்சி மாவட்டம் 3-ம் பிடித்து அசத்தல்

image

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் நடப்பாண்டு 1-ஆம் வகுப்பில் மட்டும் 2,75,459 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இந்நிலையில் மாணவா் சோ்க்கை அடிப்படையில் 8,571 மாணவா்களுடன் தென்காசி மாவட்டம் முதலிடத்தையும், 8000 மாணவா்களுடன் திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 7,711 மாணவா்களுடன் திருச்சி மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News August 5, 2025

திருச்சி: ஒரே ஆண்டில் 245 பேர் மரணம்!

image

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 1,806 சாலை விபத்துகளில் 555 பேர் பலியாகினர். அதுபோல 2024-ம் ஆண்டில் நடைபெற்ற 1,922 சாலை விபத்துகளில் 633 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2025-ம் ஆண்டு மே மாதம் வரை நடந்த 763 விபத்துகளில் 245 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. SHARE !

News August 5, 2025

கரூர் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும்

image

திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பேருந்துகளை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தற்காலிகமாக இயக்கலாம் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் துவக்கிய நாள் முதல் அனைத்து பேருந்துகளும் பஞ்சப்பூர் சென்ற நிலையில் கரூர் செல்லும் தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கின. இதுதொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

error: Content is protected !!