News April 12, 2025

மணிமேகலை விருது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம, ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவைகளில் இருந்து மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444094357 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News August 27, 2025

நெல்லையில் நகையை விழுங்கிய ஊழியர்

image

வி.கே.புரத்தை சேர்ந்தவர் சுப்பம்மாள்(70). இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை, கொக்கிரகுளம் பகுதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை ஆஸ்பத்திரி ஊழியர் ராமர் (25) திருடினார். உடனே சுப்பம்மாள் சத்தம் போடவே என்ன செயவதென்று தெரியாமல் நகையை விழுங்கியுள்ளார். ஆஸ்பத்திரியில் ராமருக்கு இனிமா மருந்து கொடுத்து நகை வெளியில் எடுக்கப்பட்டது. இதுக்குறித்து பாளை போலீசார் விசாரணை.

News August 27, 2025

டாஸ்மாக் பாரில் 17 ஆயிரம் பணம் கொள்ளை

image

மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகிலேயே டாஸ்மாக் பார் இயங்கி வருகிறது.நேற்று இரவு கடையில் விற்பனை முடிவடைந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பாரை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை வழக்கம் போல் பாரை திறப்பதற்கு ஊழியர்கள் சென்ற போது கதவு உடைக்கப்பட்டு 17,000 ரொக்க பணம் கொள்ளை போயிருந்தது. இதுக்குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை.

News August 27, 2025

கவின் கொலை வழக்கு காணொளி காட்சி மூலம் விசாரணை

image

கவின் கொலை வழக்கில் சுர்ஜித் அவருடைய தந்தை சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் ஜெயபால் ஆகியோர் இன்று நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் (தீண்டாமை தடுப்பு) ஆஜர் படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி 3 பேரும் வீடியோ கான்பரசிங் காணொளி காட்சி மூலம் நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

error: Content is protected !!