News February 22, 2025

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் தகவல்

image

நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் வணிகவளாகங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும் (https://tirunelveli.nic.in.) மாசு கட்டுப்பாடு வாரிய தளத்திலும் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்யலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 15, 2025

ஆசிரியர் தகுதி தேர்வு: 9.30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது

image

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் 15 மற்றும் 16ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெறுகின்றன தேர்வு காலை 9.30 மணிக்கு மேலாக தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். அதன் பின்னர் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் தேர்வு பனியில் சுமார் 1300 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

ஆசிரியர் தகுதி தேர்வு 11,640 பேர் எழுதுகின்றனர்

image

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளது. அதில் முதல் தாள் 11 தேர்வு மையங்களிலும் இரண்டாம் தாள் 35 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக 11,640 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். இந்த தேர்வுப் பணியில் 1300 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

JUST IN கவின் கொலை வழக்கு; ஒருவருக்கு பிடிவாரண்ட்

image

திருநெல்வேலி நீதிமன்றத்தில் இன்று கவின் கொலை வழக்கு விசாரணை நடைபெற்றது. சுர்ஜித்தின் தாயான உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி அவரது கணவர் சரவணன் மகன் சுர்ஜித் உறவினர் ஜெயபாலன் ஆகிய நான்கு பேர் மீது நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. கிருஷ்ணகுமாரியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றதை தொடர்ந்து திருநெல்வேலி நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!