News August 18, 2024
மக்காச்சோளம் சாகுபடி: விவசாயிகளுக்கு மானியம்

வேளாண்துறையின் மூலம் மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்க தமிழகஅரசு சிறப்பு திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் எருமப்பட்டி வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடிக்கு தேவையான வீரிய மக்காச்சோளம் விதை, இயற்கை உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. ஆர்வம் உள்ள விவசாயிகள் எருமப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.
Similar News
News November 15, 2025
நாமக்கல்: ஆதார் அட்டையில் திருத்தமா?

நாமக்கல் மக்களே, “ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 15, 2025
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News November 15, 2025
நாமக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உதவி மையங்களை தொடர்பு கொள்ள நாமக்கல்- 04286-233901, ராசிபுரம் -04287-222840, திருச்செங்கோடு- 04288-253811, சேந்தமங்கலம் – 6282228034, பரமத்தி வேலூர் – 04268-250099, குமாரபாளையம்- 04288-246256 – ஆகிய இலவச சேவை எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!


