News March 11, 2026
மக்கள் பீதியடைய வேண்டாம்: ஷோபா கரண்ட்லஜே

போரினால் நம் நாட்டில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே கூறியுள்ளார். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80-90% மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்துள்ளது; இந்நிலையில் கர்நாடகா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் ஹோட்டல்களை பாதிக்கும் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News April 10, 2026
காட்பாடியில் போராடுகிறாரா துரைமுருகன்?

2021-ல் காட்பாடியில் திமுகவின் துரைமுருகன், அதிமுகவின் ராமுவை விட 746 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றியை தக்க வைத்தார். இத்தொகுதியில் பெரும்பான்மை சமூகமான வன்னியர்கள், 10.5% இட ஒதுக்கீடு உரிமை குறித்து துரைமுருகன் ஒருமுறை கூட ஆதரித்து பேசவில்லை என வருத்தத்தில் இருக்கிறார்களாம். இளம் வாக்காளர்களும் விஜய், சீமான் பக்கம் சாய்வதால், இம்முறை துரைமுருகன் கடுமையாக போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.
News April 10, 2026
தர்பூசணி விலை மளமளவென குறைந்தது

தமிழகத்தில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இதற்கு இதமாக தர்பூசணி, இளநீர், வெள்ளரி ஆகியவற்றை மக்கள் நாடுகின்றனர். அதற்கேற்றார்போல் தர்பூசணி வரத்தும் சந்தைகளில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் 1 கிலோ தர்பூசணி ₹12 – ₹15 வரை விற்பனையாகிறது. சில்லறை கடைகளில் 1 கிலோ ₹20 – ₹25 வரையே விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தர்பூசணி ஜூஸும் ₹20-க்கே சில இடங்களில் கிடைக்கிறது.
News April 10, 2026
கனிமொழிக்கு அண்ணனை பார்த்து பயமா? குஷ்பு

TN-ல் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குஷ்பு விமர்சித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கனிமொழி ஏன் மவுனம் காக்கிறார்; தனது அண்ணனிடம் கேள்வி கேட்க பயப்படுகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுகவினர் பெண்களை வெறும் பாலியல் பொருளாக பார்ப்பதால் தான், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருகி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.


