News December 14, 2025

மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

2004-ல் சுனாமி தாக்கியபோது, சென்னையில் உள்ள ஒருவரது கடையில் 2 கிளிகள் தஞ்சமடைந்துள்ளன. அதன் பசியாற்றிய அந்த கணத்தில் கிளிகளுக்கும் அவருக்கும் இடையேயான காதல் தொடங்கியுள்ளது. அதன் முடிவு, தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளிக்கும் உன்னத மனிதராக உருவெடுத்துள்ளார் அந்த <<18542461>>’மக்கள் நாயகன்’ ஜோசப் சேகர்<<>>. வாயில்லா ஜீவன்களின் பசியை போக்கிய அந்த பறவை மனிதரின் உயிரை புற்றுநோய் குடித்தது பெரும் சோகம். RIP

Similar News

News March 2, 2026

BREAKING: பள்ளிகள் விடுமுறை.. தமிழக அரசு கொடுத்த அப்டேட்

image

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் வருவதால் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 2-ம் வாரத்திற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வை முடித்துவிட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

News March 2, 2026

சின்னம்மை பாதிப்பு… சுகாதாரத்துறை எச்சரிக்கை

image

கோடை வெப்பத்தில் ஏற்படும் சின்னம்மை பாதிப்பு பிப்., இறுதியிலேயே TN-ல் தொடங்கிவிட்டதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதனால் சின்னம்மை பாதிப்பு உள்ள குழந்தைகளை முழுமையாக குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதோடு, சின்னம்மை பாதிப்பு இருந்தால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், தும்மலின்போது வாய், மூக்கை மூடிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

News March 2, 2026

விஜய் – சங்கீதா விவாகரத்து.. நடிகர் ஆரியின் ரியாக்‌ஷன்

image

விஜய் – சங்கீதா விவகாரம் ஹாட் டாபிக்காக உள்ள நிலையில், தற்போது சினிமா நட்சத்திரங்கள் சிலர் அது குறித்து கருத்து கூற தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து நடிகர் ஆரியிடம் கேட்டபோது, விஜய் மட்டுமின்றி யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை என தெரிவித்தார். SM வளர்ச்சி தனிமனித விமர்சனத்தை அபாயகரமான சூழலுக்கு கொண்டு செல்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!