News February 3, 2026

மக்கள் துணையோடு திமுக ஆட்சிக்கு முடிவு: EPS

image

அண்ணாவின் 57-வது நினைவு தினத்தையொட்டி, அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த சாமானிய மனிதன் அண்ணா என EPS புகழாரம் சூட்டியுள்ளார். அன்றைய கொடுங்கோல் காங்., ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட வெற்றிதான், TN அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மக்கள் துணையோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 10, 2026

மாமியாரை பாலியல் கொடுமை செய்த மருமகன்

image

நெஞ்சை பதறவைக்கும் கொடுமையான சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த மனைவியின் தாயை, மதுபோதையில் இருந்த மருமகன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். வீட்டில் தாய் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள், தங்கையின் உதவியுடன் போலீஸில் புகார் அளித்துள்ளார். தலைமறைவான அந்த கொடூரனை போலீஸ் தேடி வருகிறது. இத்தகைய மனித மிருகத்தை என்ன செய்வது?

News February 10, 2026

IT வேலைய விட்ருங்க.. இதை பண்ணா வருமானம் கொட்டுதே!

image

எவ்வளவு உழைத்தாலும் IT-ல் சம்பாதிக்க முடியலையா? ஒருவர் இஸ்திரி போட்டே மாசத்துக்கு ₹2 லட்சத்துக்கு மேல் வருமானம் பார்க்கிறார். தினமும் 350 உடைகளை Iron செய்து ஒரு நாளுக்கு ₹3,500 சம்பாதிக்கும் அவர், Dry cleaning உள்பட எல்லாம் சேர்த்து மாதத்திற்கு ₹2,83,500 வரை சம்பாதிக்கிறார். எல்லா செலவுகளும் போக இவர் கையில் ₹2 லட்சத்துக்கு மேல் லாபம் நிற்கிறதாம். அப்புறம் என்ன.. இஸ்திரி கடை போட்டுடலாமா?

News February 10, 2026

செல்வப்பெருந்தகையின் தொகுதியை பறிக்கிறதா திமுக?

image

செல்வப்பெருந்தகைக்கு சொந்த கட்சியில்தான் எதிர்ப்புகள் என்றால், திமுகவும் தன் பங்குக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளதாம். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி MLA-ஆக இருக்கும் செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் அதே தொகுதியை ஒதுக்கக்கூடாது என திமுகவினர் சிலர் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த செல்வப்பெருந்தகையும் வரும் தேர்தலில் திருவள்ளூரில் போட்டியிடலாமா என ஆலோசித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

error: Content is protected !!