News November 19, 2024
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 280 மனுக்கள் பெறப்பட்டன

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பட்டா, முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்டவைகள் தொடர்பாக 280 மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News August 8, 2025
செங்கல்பட்டில் EB கட்டணம் அதிகமா வருதா?

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க!
News August 8, 2025
செங்கல்பட்டு: கோயிலுக்கு சொந்தமான இடம் மீட்பு

நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் உள்ள ஶ்ரீ நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பில் ஜெய்பீம் நகர் 5வது தெருவில் 1,752 சதுர அடி இடம் உள்ளது. இந்த இடம் சாது சுந்தர்சிங் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் வீடு கட்டப்பட்டிருந்தது. இந்த இடத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று (ஆகஸ்ட் 7) அறநிலையத்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த இடத்தினை மீட்டனர்.
News August 8, 2025
செங்கல்பட்டு: SBI வங்கியில் வேலை…

SBI வங்கியில் Customer Support மற்றும் Sales பிரிவில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5,180 பணியிடங்கள். சென்னையில் மட்டும் 380 பணியிடங்கள். 20 – 28 வயதுடைய டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். <