News January 6, 2025
மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் 388 மனுக்கள்

தருமபுரி மாவட்டத்தில் இன்று (ஜன.06) மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினர். இதில் மொத்தம் 388 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச வீட்டு மனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News February 12, 2026
கால்நடை வளர்ப்பவர்கள் கவனத்திற்கு

தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர்கள்
தகுதி வாய்ந்த B.V.Sc படித்து (Tamil Nadu State Veterinary Council) பதிவு பெற்ற மருத்துவர்களிடம் மட்டுமே கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
போலி கால்நடைமருத்துவர்கள், பராம்பரிய வைத்தியர்களை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும்.எனத தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்தார்.
News February 12, 2026
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பிப்-12 தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், தவில்,வயலின்,மிருதங்கம்,வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் அனைத்து வகையான நிகழ்த்துக் கலைகள் மற்றும் கவின் கலைகளை முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக மேற்கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்டக் கலைஞர்கள் அடையாள அட்டைபெற விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 0427-2386197 தொடர்புகொண்டு விண்ணபிக்க வேண்டும்.ஆட்சியர் சதிஸ் தகவல் தெரிவித்தார்
News February 12, 2026
தருமபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க


