News April 12, 2024
மக்கள் கருப்பு கொடி ஆர்பாட்டம்

சூளகிரியை அடுத்த மேலுமலை பஞ்சாயத்து ஓட்டையப்பன் கொட்டாய் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல தலைமுறைகளாக இந்த கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இதுநாள் வரை செய்து தரவில்லை என கிராம மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் இன்று(ஏப்ரல்.12) தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
கிருஷ்ணகிரி: MLA-களுக்கு பரந்த உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், ‘உடன்-பிறப்பே வா’ என்ற தலைப்பில், தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். இந்த கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நேற்று (நவ.08) நடந்தது. இந்நிலையில், “ஓசூர், தளி மற்றும் வேப்பனஹள்ளி தொகுதிகிகளில் திமுக வெற்றிபெற வேண்டும்”. என முதல்வர் மு.க.ஸ்டாலின் MLA-களுக்கு அறிவுறுத்தினார்..
News November 9, 2025
கிருஷ்ணகிரி: இரவு காவலர் ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ. 08) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 8, 2025
கிருஷ்ணகிரி பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள்<


