News March 28, 2025
மக்களே உஷார்-யாரும் வெளியே வராதீங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் 98 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News December 19, 2025
புதுவை: அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி!

புதுச்சேரி தொழிலாளர் துறைச் செயலர் ஸ்மித்தா, “புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பகம், அரசு வேலைக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க இருப்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://labour.py.gov.in இணையத்தில் உள்ள படிவத்தை இன்று (டிச.19) காலை 9:30 மணி முதல் வரும் 28-ம் தேதி மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.” என கூறியுள்ளார்.
News December 19, 2025
புதுவை: ஊக்கத் தொகை பட்டியல் வெளியீடு

தோட்டக்கலை இணை வேளாண் இயக்குநர், “வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் 2025-26ம் ஆண்டிற்கான தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன்படி மரவள்ளி சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.7,000, தென்னை சாகுபடி பெயர் பட்டியலில் உள்ளக் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.5,000 வழங்கப்படவுள்ளது.” என அறிவித்துள்ளார்.
News December 19, 2025
புதுச்சேரி மின்துறை முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி மின்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “மின் கட்டண நிலுவை உள்ள நுகர்வோர் உடனடியாக நிலுவைத் தொகையை நேரடியாகவோ அல்லது இணையவழி மூலமாகவோ செலுத்த வேண்டும். ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலுவைத் தொகை உள்ளவர்களுக்கு, எந்த விதமான முன் அறிவிப்பும் இன்றி டிச.22 முதல் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இது மின்சாரத் துறை விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.


