News December 25, 2024
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 24 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ‘நிறைந்த மனம்’ நிகழ்ச்சியில், முதல்வர் திட்டத்தின் கீழ் மக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் குறித்து கலெக்டர் பேசினார். 96 முகாம்களில் 36,312 மனுக்கள் பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார். பரிசீலனை செய்து 24,099 மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டது. இந்த முயற்சியில் அரசு சேவைகள் மக்களிடம் எளிதாகப் பெறப்படும் வகையில் வழங்கப்பட்டதாக கலெக்டர் கூறினார்.
Similar News
News August 21, 2025
கடன் உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 30 சதவீதம் மானியத்தில் கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட நாச்சியார் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. வங்கியை ஊழியர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். ரூ.54,80,700, காசோலையை மாவட்ட ஆட்சியர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கினார்.
News August 20, 2025
கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆக.22 காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு பட்டப்படிப்பு ஐடிஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கு மேற்பட்ட கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. விருப்பமுள்ளவர்கள்<
News August 20, 2025
கிருஷ்ணகிரியில் நாளை மின் தடை

கிருஷ்ணகிரி நகர், தொழிற்பேட்டை, பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஐக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி-1, வீட்டு வசதி வாரியம் பகுதி-2 பழையபேட்டை, குண்டலபட்டி, சுத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி ஆகிய இடங்களில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.